Monday, July 19, 2010
எலுமிச்சம் பழத்தின் பயன்!
சுப காரியத்தில் முதல் இடம் வகிக்கும் பழம் தான் எலுமிச்சை. இது உலகெங்கும் நிறைந்து காணப்படும் பழமாகும். குறைந்த விலையில் எல்லா சத்துக்களும் நிறைந்த பழங்களில் எலுமிச்சையும் ஒன்று.
மனிதர்களுக்கு ஏற்படும் பலவித நோய்களை குணமாக்கும் சர்வ ரோக நிவாரணியாக எலுமிச்சை திகழ்கிறது. எலுமிச்சையின் தாயகம் பாரதம்தான்.
முதன்முதலாக 1784ல் கார்ஸ்வில் ஹெம்ஷீலி என்பவர் எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இருப்பதைக் கண்டுபிடித்தார். மருத்துவர் ப்ளென்னின் (1875) ஆராய்ச்சியில் கெட்ட இரத்தத்தை தூய்மை படுத்தும் மருந்துகளில் எலுமிச்சையை விட சிறந்தது வேறு இல்லை என கண்டறிந்தார்.
உதாரணமாக இரண்டாவது உலகப் போரின்போது ஜெர்மனிய வீரர்களின் காயத்தில் இருந்து ஓழுகும் இரத்தத்தை உடனடியாக நிறுத்த எலுமிச்சையை உபயோகப் படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்தியர்களை விட மேலை நாட்டினர் எலுமிச்சை பழத்தையும், அதன் விதை, தோல் அனைத்தையும் மருந்தாக பயன்படுத்துகின்றனர். இதிலிருந்து வாசனைப் பொருட்களும் தயாரிக்கின்றனர். இந்தியர்களின் வீடுகளில் எலுமிச்சை ஊறுகாய் இல்லாமல் இருக்காது.
கண்களைப் பறிக்கும் மஞ்சள் நிறத்தில் மங்களகரமாய் காட்சிதரும் எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது.
100 கிராம் எலுமிச்சை பழத்தில்
நீர்ச்சத்து - 50 கிராம்
கொழுப்பு - 1.0 கிராம்
புரதம் - 1.4 கிராம்
மாவுப்பொருள் - 11.0 கிராம்
தாதுப்பொருள் - 0.8 கிராம்
நார்ச்சத்து - 1.2 கிராம்
சுண்ணாம்புச் சத்து - 0.80 மி.கி.
பாஸ்பரஸ் - 0.20 மி.கி.
இரும்புச் சத்து - 0.4 மி.கி.
கரோட்டின் - 12.மி.கி.
தையாமின் - 0.2 மி.கி.
நியாசின் - 0.1 மி.கி.
வைட்டமின் ஏ - 1.8 மி.கி.
வைட்டமின் பி - 1.5 மி.கி.
வைட்டமின் சி - 63.0 மி.கி
எலுமிச்சையின் பயன்கள்
வயிறு பொருமலுக்கு
சிலருக்கு கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன்போல காணப்படும். வாயுவும் சேர்த்து தொல்லை கொடுக்க ஆரம்பிக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து அதில் வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் மேற்கண்ட தொல்லைகள் நீங்கும்.
தாகத்தைத் தணிக்க
அடிக்கடி தாகம் ஏற்படும் சிலருக்கு எவ்வளவுதான் தண்ணீர் அருந்தினாலும் தாகம் குறையாமல் இருக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து இரண்டு குவளை நீரில் சர்க்கரை சேர்த்து பருகினால் தாகம் தணியும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரைக்கு பதிலாக உப்பு சேர்த்து அருந்தலாம்.
கல்லீரல் பலப்பட
எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறெடுத்து, அதில் தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் பலப்படும்.
தலைவலி நீங்க
ஒரு குவளை சூடான காபி அல்லது தேநீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி, அரைமூடியை பிழிந்து சாறு கலந்து அருந்தி வந்தால் தலைவலி குணமாகும். காலை, மாலை என இருவேளையும் அருந்த வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வாறு அருந்தி வந்தால் தலைவலி நீங்கும்.
நீர்க் கடுப்பு நீங்க
நீர்க்கடுப்பு பிரச்சனை சிலருக்கு அவதியை ஏற்படுத்தும். இந்நிலை நீங்க எலுமிச்சம் பழச் சாறுடன் சிறிது உப்பு கலந்து ஒருவாரம் அருந்தி வந்தால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் நீங்கும்.
இரத்தக் கட்டுக்கு
உடம்பில் எங்காவது அடிபட்டாலோ, வீங்கினாலோ ரத்தம் கட்டி இருக்கும். இந்தப் பகுதியை தொட்டாலே சிலருக்கு வலியெடுக்கும். இந்த ரத்தக்கட்டு நீங்க
சுத்தமான இரும்புக் கரண்டியில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து அதில் சிறிதளவு கரிய போளத்தைப் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) போட்டு காய்ச்ச குழம்பு போல வரும். அதனை எடுத்து பொறுக்கும் அளவு சூட்டுடன் இரத்தக்கட்டு உள்ள பகுதிகளில் பற்று போட வேண்டும். இவ்வாறு காலை, மாலை இரு வேளையும் சுத்தம் செய்து பற்று போட்டு வந்தால் ரத்தக்கட்டு குணமாகும்.
பித்தம் குறைய
எலுமிச்சம் பழத்தை பிழிந்த சாற்றில் ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தையும், அதே அளவு மிளகையும் கொஞ்சம் கலந்து வெயிலில் காயவைத்து காய்ந்தபின் நன்றாக பொடித்து எடுத்து பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். காலை மாலை இருவேளையும் இதில் அரை தேக்கரண்டி அளவு வாயிலிட்டு வெந்நீர் குடித்து வந்தால் பித்தம் குறையும்.
எலுமிச்சை தோல்
எலுமிச்சை பழத்தின் தோல், தோல் சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கி சருமத்திற்கு பளபளப்பைத் தருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எலுமிச்சம் பழத்தோலில் அதிக சக்தி கொண்ட எண்ணெய் இருப்பதை அறிந்தனர். இது பலவகையான நறுமணத் தைலங்கள் செய்வதற்கும் உபயோகமாகிறது. மேலும் வாதம், எரிச்சல், தொண்டைப்புண் போன்ற வற்றிற்கு நல்லது.
நகச் சுற்று கொண்டவர்கள் எலுமிச்சம் பழத்தை விரலில் சொருகி வைத்தால் நகச்சுற்று குணமாகும். கிராமப் புறங்களில் இன்றும் இம்மருத்துவ முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எலுமிச்சம் பழத்தோலை உரித்தவுடன் அதன் மேல் வெள்ளையாக இருக்கும் சிறு தோலில் வைட்டமின் பி அதிகமாக உள்ளது.
எலுமிச்சம் பழம், உடலில் களைப்பைப் போக்கி உடலுக்கு புத்துணர்வை உண்டாக்கும்.
எலுமிச்சம் பழச் சாறை உடலில் தேய்த்து குளித்தால் உடல் வறட்சி நீங்கும்.
· தாதுவைக் கெட்டிப்படுத்தும்.
· உடல் நமைச்சலைப் போக்கும்
·மாதவிலக்கின் போது உண்டாகும் வலியைக் குறைக்கும்.
· மூலத்திற்கு சிறந்த மருந்தாகும்.
எலுமிச்சம் பழத்தின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். இதன் மருத்துவப் பயனை உணர்ந்து ஆரோக்கியம் பெறுங்கள்.
Wednesday, June 30, 2010
School Bus...
"ஐய்யோ பள்ளி பேருந்து... ஆள விடுங்கடா சாமி..." சிட்டாக பறக்கும் சிறுவன்... (சிங்கமட நீ. அப்படியே, என்னை போலவே உள்ளாயே!!!)...
விலையுர்ந்த பள்ளி பேருந்து(கோடீஸ்வரர்களின் குழந்தைகளுக்கான பேருந்து போலும்)...
விரைவு பள்ளி வாகனம்...
இதுவும் பள்ளி பேருந்துதானா(அட கடவளே, உன் படைப்பில் தான் எத்தனை பிரிவினைகள்!!!)....
Tuesday, June 29, 2010
அவசர நிலை(Emergency)
Tuesday, June 22, 2010
தமிழின் சிறப்பு
என் அமிழ்து தமிழுக்கு நிகரேது!!!
Friday, June 18, 2010
மூன்று ரூபாய் நோட்டு
அடுத்த நிருத்தத்தில்லேயே இரு தொப்பி போட்ட காக்கிகள் நுழைந்தது பேருந்தினுள்ளே. ஏறியதும் நடத்துனரை பார்த்து அந்த ஆசாமிகள் கையை அசைக்க, அவர்கள் உடையை பார்த்து அரசு ஊழியர்கள்(போக்கு வரத்துத்துறை ஊழிகள் அல்ல*) என்பதை புரிந்துகொண்டார் அருமை நடத்துனர் நண்பர். பாவம அவரால் என்ன செய்ய முடியும்,அதிகாரம் அவர்கள் கையிலல்லவா இருக்கிறது. அரசு வேலையில், நல்ல சம்பளமும் அதை விட அதிக கிம்பளமும் பெறும் இவர்களை போன்ற (ஒரு சில) ஆசாமிகளால் ஒட்டுமொத்த காக்கிகளுக்கேல்லவா அவமானம். ஒரு மூன்று ரூபாய் கொடுத்து பயண சீட்டை பெற, இவர்களுக்கு ஏன் இந்த தயக்கம். அந்த பெரியவரிடம் இருந்து இந்த காக்கிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
*குறிப்பு:போக்கு வரத்துத்துறை ஊழியர்களுக்கு மட்டுமே இல்லவச பயணம். மேலும் மாற்று திறனாளிகளுக்கும் இது பொருந்தும்.
Tuesday, June 15, 2010
என் மருத்துவர் 10வது fail ஆ!!!
Thursday, June 10, 2010
தமிழ் அறிவோம்
| தமிழ் எண்கள் மற்றும் சில குறியீடுகள் |
|---|
| 0 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 100 | 1000 |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ௦ | ௧ | ௨ | ௩ | ௪ | ௫ | ௬ | ௭ | ௮ | ௯ | ௰ | ௱ | ௲ |
|
|---|
கொட்டை எழுத்தில் எழுதி வைக்க வேண்டியவை!!!
Wednesday, June 9, 2010
தமிழ்
Monday, June 7, 2010
மயான பூமி!
பொட்டல் காடு
Saturday, June 5, 2010
What do Mechanical Engineers do in industry?
Wednesday, June 2, 2010
என்ன செய்யலாம்?
விண்ணை(கடல்) தாண்டி வருவாளா!!!
Why
Do you know why the flame burn upward direction only? (For an example: if you are keeping a candle vertical, horizontal or any position, the flame’s direction upward from the earth to sky) Why?
Note: Answer will be posted after your replies…
Keep addressing
My address is smile.
I don’t mind to give my address to everyone .
So you too please keep addressing . . .
-Dear Selvaநான் ரசித்தது
கிளி ஜோசியத்தில் நம்பிக்கை இல்லை, ஆனாலும் பார்த்தேன் . . .
அந்த கிளியின் இரு நிமிட சுதந்தரத்திற்காக ! ! !
All Computer Shortcuts
http://support.microsoft.com/kb/301583
http://support.microsoft.com/kb/126449
use your PC efficiently with these shortcuts...
enjoy friends...
Stay alive in the wild
You may go to tour some forestry place in this summer. At that time, i want to give a superb role for you. Just imagine, you are missed from your group without any sources!!!
You don't have guidelines map and forgot your path to return back. You are forced to stay there. Even, you don't have food,water too... what do you do?
OK.... don't scare.... You can survive until somebody find you. I will tell a simple method to get atleast drinking water.
Just follow these steps.
Step 1
Build your solar still in the lowest, dampest area you can find at the base of a hill, in a dry stream bed. This is where ground water accumulates and is the best place for gathering it.
Step 2
Carry a transparent sheet of strong plastic of minimum 6 feet by 6 feet, a cup or a container, and 6 feet of plastic tubing with you in your pack. In extreme survival situations you may be forced to make due with whatever you have. Understanding the principles of the solar still will enable you to adapt to your situation.
Step 3
Dig a large hole in the ground, 2 feet deep and 3 feet in diameter. The idea is to dig down to damp soil.
Step 4
Place your container, centered, in the bottom of the hole.
Step 5
Place one end of your plastic tubing in the container.
Step 6
Cover the hole with the plastic sheet. Use the dirt from the hole to weight the plastic surrounding the hole, so that no air can escape. Make sure the free end of the plastic tubing is accessible.
Step 7
Use a small rock to weight the center of the plastic down over the cup, creating a cone over your cup with the point pointing into your cup.
Step 8
Understand that as the sun heats up the soil, moisture evaporates and condenses on the plastic. This condensed moisture drips to the lowest portion of the plastic and then drips off into your cup.
Step 9
Drink from your cup by sucking on the tubing. That way you don't have to disassemble your still to get a drink. If you haven't tube don't worry just disassemble and drink it from the container.
Realize that only pure water evaporates, so that in the evaporation process, most of the impurities are left in the soil. Let you try it in your survival situation. I will pray god to give you such a great situation in your life. enjoy friends....
Hi friends
hi fiends, i came here to share my views and thoughts with you. I feel very happy to put my foot prints here. This is not just for time pass or anything. It is just a place which my thoughts may surround your mind. With hope, i try to make this blog interesting and informative. I will meet soon with my posts................


