Wednesday, June 2, 2010

விண்ணை(கடல்) தாண்டி வருவாளா!!!

காலை 10 மணிக்கே வெயில் சுட்டெரித்தது. வெளியில் சென்றால் தலையை பிளந்துவிடும் போலிருந்தது. வேர்வையும் காட்டாறாக ஊற்றெடுக்க எரிச்சலுடன் வீட்டிலேயே முடங்கி விட்டேன். மூன்று நாட்கள் முன் லைலா(புயலின் பெயர்) என்னமா வெயிலை தணித்தால். அந்த மூன்று நாட்களும் பகல் முழுதும் இதமான காற்றே தழுவி சென்றது. என்ன தான் லைலா கடலோர மாவட்டங்களை புரட்டி போட்டாலும் என் போல மதுரை வாசிகளை லைலா குளிர்வித்தாள். என்பது மறுக்க முடியாத உண்மையே. பருவ மழை காலங்கள் பொய்த்து விட்ட நிலையில் லைலா போன்றவர்கள் வந்து செல்வது இதமானதே. இன்னொரு முறை கடல் தண்டி வருவாளா!!!

- இப்படிக்கு பாமரன்

No comments:

Post a Comment